Jun 26, 2009


நீ போனதோடு தொலைந்து போனது
என் கனவு மட்டுமல்ல
நிம்மதியும் கூடத்தான் !

கண்ணீர்


கண்களுக்கும் கவிதைக்கும் மட்டுமல்ல
நீலக் கடலுக்கும் அந்தி நிலவுக்கும் புரியும்
நீயில்லாமல் நான் வடிக்கும் ரத்தக்கண்ணீர்...

கடற்கரை மணலில்
கால் தடம் பதிக்கிறேன்
உன் மனதில் முடியாததால்

வேண்டும்


நிலவும் மலரும் பூக்கும்
காலை மாலைதோறும்
கனவும் நினைவும் கூடும்
கருநிற இரவுகள் முழுதும்
உன் நினைவின்
சுவடுகள் வேண்டும் - என்
சுவாசங்கள் சுருங்குகின்ற போதும்.