புழுதிப்புயல்கள் வந்தாலும்
நிசப்தமாய் முன்னேறிக்கொண்டிருப்பேன்
ஏனெனில் - நான்
நீங்கள் ஊதினால் அணையும் தீக்குச்சி அல்ல
என்றுமே நித்திய சூரியன் .........................
நான் இன்றும் சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்
என் உள்ளத்தில் இன்னும் தைரியம் இருப்பதால்....
காற்று வீசும் வரை
கடலின் ஆழம் வரை
வானநீலம் வரை
தமிழே நீ வேண்டும்
வாழ்வின் இறுதிவரை