Jul 18, 2009

நட்பின் மழையில் நனைகிறேன்
நாளைய என் சோகங்களையும்
என்றைய என் வடுக்களையும் மறந்து .........

உயிர்கள் தேடும் அன்பிற்கு - இது
அகராதி சொல்லாத அர்த்தம் .....
ஆசை ..........

பலருக்கு பணத்தில்

சிலருக்கு ஆடம்பரத்தில்

எனக்கோ உன்பூவிதழ்களில் .....

Jul 17, 2009

சூரியன்

கார் மேகங்கள் சூழ்ந்தாலும்

புழுதிப்புயல்கள் வந்தாலும்

நிசப்தமாய் முன்னேறிக்கொண்டிருப்பேன்

ஏனெனில் - நான்

நீங்கள் ஊதினால் அணையும் தீக்குச்சி அல்ல

என்றுமே நித்திய சூரியன் .........................


நான் இன்றும் சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்

என் உள்ளத்தில் இன்னும் தைரியம் இருப்பதால்....


காற்று வீசும் வரை


கடலின் ஆழம் வரை


வானநீலம் வரை


தமிழே நீ வேண்டும்


வாழ்வின் இறுதிவரை



Jul 15, 2009

என் ஒருநாள் பொழுது.....

வானத்து முகிலிடை செந்நிறம் பரப்பி
மங்களப்புன்னகை பூத்து மயக்கிட
தூக்கம் விழித்து நாணம் விலக்கி
வெளியே வந்தாள் சூரியதேவதை

விடியல் கண்டு உயிர்கள் மகிழும்
என் போன்ற சில பேர்கள் தவிர.....
இருவாளித்தண்ணீரில் குளியல் கொண்டு
அரைமணிப்பொழுதில் சேலை கட்டி
ஆசான் என்னும் வேடம் கொண்டு
நானும் போகிறேன் பள்ளிக்கூடம் ..........


வளரும் ..................
தூரத்து மேகமாய்
தொலைதூர விண்மீனாய்
இடைவெளிகள்

நீண்டு போனாலும்
மொழிகளைத்தண்டிய இசை போல
தேசங்கள் தாண்டிய தென்றல் போல
என்றென்றும் நித்திய சூரியன் போல
நம் இதயங்கள் எப்பொழுதும்
ஒரே சப்தத்திலேயே துடிக்கும்












எழுபத்து இரண்டு

மேளகர்த்தாவிற்குள்

ஒளிந்திருப்பது

இசை மட்டுமல்ல

என் பூபாளமே நீயும் தான்.............

கண்ணே நீ என் கவிதை


உன்னை ரசிப்பதிலேயே


கழிந்துபோகிறது - என்


நாள்காட்டி


Jul 11, 2009

நீண்டதூரம் போய்விட்டேன் உன்னை விட்டு

மீண்டும் வருவேன் காத்திரு