மழை இப்போது நம்மை நனைக்கவே யோசிக்கின்றது !நிலா நம் முற்றத்தை மட்டும் தொடுவதேயில்லை !வசந்தம் நிரந்தர விடுமுறை எடுத்துக்கொண்டது.இருந்தும், நாம் சுவாசிக்கின்றோம்உடல் நீங்கி உயிர் போகின்றவரை !
வஞ்சிக்கப்பட்ட கன்னியர்கதறுகிறார்கள் - தம்மை
வசீகரித்துப்போன
காளையர்க்காக !
மனை துறந்த மனைவிகள்காத்திருக்கிறார்கள்கானலாகிய
கணவர்களுக்காக!
முப்பது வருட முதிர்கன்னியர்விழித்துக்கிடக்கின்றனர்சீதனம் கேட்காத
ஸ்ரீராமர்களுக்காக !பத்து வயது
பள்ளி மொட்டுக்கள்
போர்க்கொடி துக்கின
துகிலுரிந்த சில
துச்சாதனர்களுக்காக !இங்கே சில கண்ணகிகள்
சில தமயந்திகள்
சில சகுந்தலைகள்
சில சீதைகள்
வாழ்ந்துகொண்டுதனிருக்கின்றார்கள்
இருந்தும்,இவர்களை இலக்கியமாக்க
இன்னும் பேனா முனைகள் தயங்குவதேன்!
பஞ்சு மெத்தைகள் தொலைந்து போய் - நம்மழலைகள் இன்று முகாம் வேலிகளில்....முட்கள் காயம் செய்தது- நம்உடலை மட்டுமல்லஉள்ளத்தையும் தான் .