Jun 27, 2009



மழை இப்போது நம்மை நனைக்கவே யோசிக்கின்றது !
நிலா நம் முற்றத்தை மட்டும் தொடுவதேயில்லை !
வசந்தம் நிரந்தர விடுமுறை எடுத்துக்கொண்டது.
இருந்தும், நாம் சுவாசிக்கின்றோம்
உடல் நீங்கி உயிர் போகின்றவரை !

நீதிக்காய் சில நிலாக்கள்



வஞ்சிக்கப்பட்ட கன்னியர்
கதறுகிறார்கள் - தம்மை
வசீகரித்துப்போன

காளையர்க்காக
!
மனை
துறந்த மனைவிகள்
காத்திருக்கிறார்கள்
கானலாகிய
கணவர்களுக்காக
!
முப்பது
வருட முதிர்கன்னியர்
விழித்துக்கிடக்கின்றனர்
சீதனம் கேட்காத
ஸ்ரீராமர்களுக்காக
!
பத்து வயது
பள்ளி
மொட்டுக்கள்
போர்க்கொடி
துக்கின
துகிலுரிந்த
சில
துச்சாதனர்களுக்காக
!

இங்கே சில கண்ணகிகள்
சில
தமயந்திகள்
சில
சகுந்தலைகள்
சில
சீதைகள்
வாழ்ந்துகொண்டுதனிருக்கின்றார்கள்

இருந்தும்
,
இவர்களை இலக்கியமாக்க
இன்னும்
பேனா முனைகள் தயங்குவதேன்!

தலைவிதி


பஞ்சு மெத்தைகள் தொலைந்து போய் - நம்
மழலைகள் இன்று முகாம் வேலிகளில்....
முட்கள் காயம் செய்தது- நம்
உடலை மட்டுமல்ல
உள்ளத்தையும் தான் .