Jul 15, 2009

என் ஒருநாள் பொழுது.....

வானத்து முகிலிடை செந்நிறம் பரப்பி
மங்களப்புன்னகை பூத்து மயக்கிட
தூக்கம் விழித்து நாணம் விலக்கி
வெளியே வந்தாள் சூரியதேவதை

விடியல் கண்டு உயிர்கள் மகிழும்
என் போன்ற சில பேர்கள் தவிர.....
இருவாளித்தண்ணீரில் குளியல் கொண்டு
அரைமணிப்பொழுதில் சேலை கட்டி
ஆசான் என்னும் வேடம் கொண்டு
நானும் போகிறேன் பள்ளிக்கூடம் ..........


வளரும் ..................
தூரத்து மேகமாய்
தொலைதூர விண்மீனாய்
இடைவெளிகள்

நீண்டு போனாலும்
மொழிகளைத்தண்டிய இசை போல
தேசங்கள் தாண்டிய தென்றல் போல
என்றென்றும் நித்திய சூரியன் போல
நம் இதயங்கள் எப்பொழுதும்
ஒரே சப்தத்திலேயே துடிக்கும்












எழுபத்து இரண்டு

மேளகர்த்தாவிற்குள்

ஒளிந்திருப்பது

இசை மட்டுமல்ல

என் பூபாளமே நீயும் தான்.............

கண்ணே நீ என் கவிதை


உன்னை ரசிப்பதிலேயே


கழிந்துபோகிறது - என்


நாள்காட்டி