Jun 10, 2009

நிலா உதிக்கின்ற நிசப்த இரவுகளில் தனி நட்சத்திரமாய் பார்த்துக்கொண்டிருப்பேன் உன்னை நிலவாக நினைத்து ..........
கள்ளிச்செடிகள் கல்லெறிபடலாம்
காலப்போக்கில் ஆறிப்போகும்
காதல் இதயம் சொல்லெறிபட்டால்
ஆயுசுக்கும் ரணமாயிருக்கும் .......

நீயும் நிலவும்


நிலவை விட
நான் நேசிப்பது
உன்னையும் - உன்
இசையையும் !

கையூட்டு

தென்றல் வரும் திசைகள் தோறும்
வாசனைகள் வருகின்றதே
காத்திற்கும் கொடுத்தாயோ கையூட்டு !

நீயும் என் கவிதையும்


என் கவிதை அழுகின்றது
அருகே கிறுக்கப்பட்டிருந்த
உன்பெயருக்கு முதலிடம்
கிடைத்ததாம் என்று........

வேகத்தடைகள்

இறந்தகாலக் கனவுகளில்
தேடிய என் ராஜகுமாரன்
வந்து சேர்ந்ததென்னவோ
நிகழ்கால வசந்தங்களில்
ஏன் கண்ணே தாமதம்?
உன் குதிரைக்கும் போட்டனரோ
வேகத்தடைகள்