Nov 30, 2010

வேரற்ற விருட்சங்கள்

வடக்கில் மட்டும் சில
வடுக்கள் எஞ்சின !
தெற்கோ வெற்றி வாகை சூடியது !

எங்கும் எதிரொலித்தது
"தீவிரவாதம் ஒழிந்தது"

யுத்தம் முடிகிறது ......
ஊடகங்களில் நேரடி வர்ணனை !
தளபதிகள் கதாநாயகர் பட்டியலில் !

வீதிகள் தோறும்
வெற்றியின் எதிரொலிப்பு !

தேசியக்கொடி விற்போர் பைகள்
முதல் முறையாய் நிரம்பியிருந்தன !

பண்டிகை இல்லை பட்டாசுகள்
விலைப்பட்டன !

வாசல்கள்தோறும் கொடிகளின்
அலங்காரம் !
ஆனால் , அவள் வீட்டில் மட்டும்
அமங்கலத்தின்அடையாளம்!

இனி யுத்தம் நாட்டில் இல்லை
காதல் யுத்தம் அவள் வீட்டிலும் இல்லை !

ஏனெனில் ,
யுத்தம் காவு கொண்டது
வயிற்றுப்பசிக்கு ஆயுதம் தரித்த
அவள் அன்புக்கணவனையல்லவா ?














Nov 23, 2010


Oct 15, 2010

காதல் பாடல்

விழி பேசும் மொழி காதலே
இரு உடல் மீட்டும் இசை காதலே
இதயங்கள் துடிக்கின்ற ஸ்வரம் காதலே
இரவோடு இருளாகவே நம் உயிரோடு உறவடுமே

மழலை பேசும் கொஞ்சல்
மங்கை இதழ் கெஞ்சல்
மஞ்சள் வானில் மின்னும் மின்னல்
குயிலின் இனிய நாதம்
குருவின் புதிய வேதம்
குவளை மலர் வீசும் நறுமணம் காதலே
மலரோடு மணமாகவே
நம் மனதோடு மழைக்காலமே ..........

சிறகு விரிக்கும் குருவி
சில்லென்ற மலை அருவி
உடம்பில் ஊறும் இன்ப கலவி காதலே
நதியோர நாணல்
நடந்து பழகும் தென்றல்
நாதத்தின் கூடல் இன்பக்காதலே
மலரோடு மணமாகவே
நம் மனதோடு மழைக்காலமே ..............


Sep 15, 2010











Sep 13, 2010


வானம் நிலாத்திலகமிட்டு
கருவண்ணப்பூமுடிச்சு
இரவின் வருகைக்காய்
காத்துக்கிடந்தது

பட்டமரக்கிளைகளிலே
நீலக்குயில்கள் கவலைமறந்து
கூவிக்கொண்டிருந்தன........

(continue)

Jul 11, 2010

Jun 1, 2010


இரவோடு இருளாக - உன்
உயிரோடு கலந்திட வேண்டும்