Jun 12, 2013

http://www.youtube.com/watch?v=fdxyOOhS1Bo&feature=share

 எனது தந்தை வீ . எம் குகராஜாவின் (இலங்கையில் தேசிய விருது வென்ற நாடகாசிரியர்) மகள் என்ற வகையில் என் தந்தையின் மண்ணில் அவரது சிந்தனைகளின் சாரத்தை போல ஒரு அழகிய குறுந்திரைப்படத்தில் நடித்ததையிட்டு பூரிப்போடு இருக்கிறேன்....
இது என் முதலாவது திரைப்படம்......

விதையாய் எனை
விதைத்து
விருட்சமாய்
காணும் முன்னே
கலைந்து .....
காற்றோடு
கரைந்து போன
என் அன்புத்தந்தைக்கு
என் கலைகள் யாவும் சமர்ப்பணம் ....!

May 15, 2013


பனை மரமும் பூத்தாச்சு ....

காற்றெல்லாம் வலைவீசி
கனவெல்லாம் துணை தேடி
காத்திருக்கும் பொழுதுகள்
கத்தியாய் குத்துதடா !

காதலில் கரைந்திருந்து
இருகனிகளாய் இணைந்திருந்த
கருவேலங்காடுகள் இன்று
கருகித்தான் போனதடா!

வயலோடு பசுமைவாங்கி
வனப்போடு வாழ்ந்த நாட்கள்
பனை கொண்ட நிழலாக
சுருங்கித்தான் போனதடா !

ஊர்மெச்ச வாழ்விக்க
உழைப்போடு வருவேனென்று
சொல்லிய வார்த்தைகள்
எதிரொலியாய் கேட்குதடா !
வருடங்கள் பத்தாச்சு
பனைமரமும் பூத்தாச்சு
நீ சொன்ன சொல்லெல்லாம்
காத்தோட போயாச்சு

செம்மணியில் புதைந்தாயோ
வெலிக்கடையில் உறைந்தயோ
புரியாமல் புலம்புகிறேன்
தூது விட மாட்டையோ ?


நவயுகா
(சுடச்சுட ஒரு சூரியன் தொகுப்புக்காக )