
வஞ்சிக்கப்பட்ட கன்னியர்
கதறுகிறார்கள் - தம்மை
வசீகரித்துப்போன
காளையர்க்காக !
மனை துறந்த மனைவிகள்
காத்திருக்கிறார்கள்
கானலாகிய
கணவர்களுக்காக!
முப்பது வருட முதிர்கன்னியர்
விழித்துக்கிடக்கின்றனர்
சீதனம் கேட்காத
ஸ்ரீராமர்களுக்காக !
பத்து வயது
பள்ளி மொட்டுக்கள்
போர்க்கொடி துக்கின
துகிலுரிந்த சில
துச்சாதனர்களுக்காக !
இங்கே சில கண்ணகிகள்
சில தமயந்திகள்
சில சகுந்தலைகள்
சில சீதைகள்
வாழ்ந்துகொண்டுதனிருக்கின்றார்கள்
இருந்தும்,
இவர்களை இலக்கியமாக்க
இன்னும் பேனா முனைகள் தயங்குவதேன்!
No comments:
Post a Comment