Jun 27, 2009

நீதிக்காய் சில நிலாக்கள்



வஞ்சிக்கப்பட்ட கன்னியர்
கதறுகிறார்கள் - தம்மை
வசீகரித்துப்போன

காளையர்க்காக
!
மனை
துறந்த மனைவிகள்
காத்திருக்கிறார்கள்
கானலாகிய
கணவர்களுக்காக
!
முப்பது
வருட முதிர்கன்னியர்
விழித்துக்கிடக்கின்றனர்
சீதனம் கேட்காத
ஸ்ரீராமர்களுக்காக
!
பத்து வயது
பள்ளி
மொட்டுக்கள்
போர்க்கொடி
துக்கின
துகிலுரிந்த
சில
துச்சாதனர்களுக்காக
!

இங்கே சில கண்ணகிகள்
சில
தமயந்திகள்
சில
சகுந்தலைகள்
சில
சீதைகள்
வாழ்ந்துகொண்டுதனிருக்கின்றார்கள்

இருந்தும்
,
இவர்களை இலக்கியமாக்க
இன்னும்
பேனா முனைகள் தயங்குவதேன்!

No comments: