Nov 30, 2010

வேரற்ற விருட்சங்கள்

வடக்கில் மட்டும் சில
வடுக்கள் எஞ்சின !
தெற்கோ வெற்றி வாகை சூடியது !

எங்கும் எதிரொலித்தது
"தீவிரவாதம் ஒழிந்தது"

யுத்தம் முடிகிறது ......
ஊடகங்களில் நேரடி வர்ணனை !
தளபதிகள் கதாநாயகர் பட்டியலில் !

வீதிகள் தோறும்
வெற்றியின் எதிரொலிப்பு !

தேசியக்கொடி விற்போர் பைகள்
முதல் முறையாய் நிரம்பியிருந்தன !

பண்டிகை இல்லை பட்டாசுகள்
விலைப்பட்டன !

வாசல்கள்தோறும் கொடிகளின்
அலங்காரம் !
ஆனால் , அவள் வீட்டில் மட்டும்
அமங்கலத்தின்அடையாளம்!

இனி யுத்தம் நாட்டில் இல்லை
காதல் யுத்தம் அவள் வீட்டிலும் இல்லை !

ஏனெனில் ,
யுத்தம் காவு கொண்டது
வயிற்றுப்பசிக்கு ஆயுதம் தரித்த
அவள் அன்புக்கணவனையல்லவா ?













3 comments:

பனித்துளி சங்கர் said...

கடந்தவைகளும் நிகல்பவைகளும் எதிர்பார்ப்புகளில் முடிந்திருக்கும் கவிதை வலி சுமந்து நிற்கிறது அருமை

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

Navaayugha Raajkumar said...

நன்றி